மண் மற்றும் நீர் பரிசோதனை
மண் மற்றும் நீர் பரிசோதனை
நாடு முழுவதும் விவசாயம் செய்யும் மண்ணும் தண்ணீரும் ஒரே மாதிரி அமைவதில்லை. இயற்கையாக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பண்புகளுடன் மண் மற்றும் தண்ணீர் அமைந்துள்ளது. இதை சரியாக அறிந்து விவசாயம் செய்தால் மட்டுமே மேலும் முன்னேற முடியும்.
விவசாயத்தில் நீர் மற்றும் மண் முக்கிய பங்கு வகிக்கின்றன ஒரு பயிரின் வளர்ச்சியைத் தீர்மானிப்பவை மண், தண்ணீர் மற்றும் சுற்றுப்புற தட்பவெப்பநிலைதான். இதில் நாம் மண் மற்றும் தண்ணீரின் தன்மைகளை அறிந்து கொள்ளவேண்டும்.
மண் மற்றும் தண்ணீரின் பண்புகளை தீர்மானிப்பது கார, அமில தன்மை மற்றும் பேரூட்டச்சத்துக்களும் நுண்னூட்டச் சத்துக்களுமே.
நம் வயலில் உள்ள மண், நாம் பாசனம் செய்யக்கூடிய நீரின் கார, அமில தன்மை, பேரூட்டச்சத்து மற்றும் நுண்னூட்டச் சத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும். இதனால் நமது நிலத்தில் அதிகமுள்ள சத்துக்கள் எவை? குறைவான சத்துக்கள் எவை? என அறிய முடிகிறது. இதன் மூலம் எளிமையாக சத்துக்களை பராமரித்து விவசாயம் செய்வதுடன், தேவையற்ற பொருளாதார மற்றும் கால விரயத்தைத் தவிர்க்கலாம்.
மண் பரிசோதனை
மண் பரிசோதனை செய்ய வேண்டிய வயலில் கீழ்க்கண்ட இடங்களில் மண்மாதிரி எடுக்கக் கூடாது. எருக்குழி, கால்நடைகள் கட்டிய இடம், வரப்பு ஓரம், மரநிழலடி, இலைச்சருகுகள் கிடந்த இடம் (மக்கிய, மக்காத இலைகள்), ஓடைகள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள், 40 நாட்களுக்குள் ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளித்த வயல், மேற்கூறிய இடங்களில் மண்மாதிரி எடுக்கக்கூடாது.
மண்மாதிரி எடுக்கக்கூடிய இடங்களை தேர்வு செய்து, அதன் மேல் மண்ணை (ஒரு அங்குல ஆழ மண்ணை மட்டும்) நீக்கிவிட்டு அதன் பிறகு V வடிவத்தில் மண்வெட்டியால் வெட்ட வேண்டும். இவ்வாறு அரை அடி ஆழம் வெட்டிய பிறகு அந்த மண்ணை அப்புறப்படுத்திவிட்டு பிறகு இரும்பு சம்மந்தப்படாத பிளாஸ்டிக் அல்லது கல் அல்லது மரக்குச்சியின் மூலம் வெட்டிய குழியில் எல்லா பகுதியிலும் சுரண்டி அரைக்கிலோ அளவிற்கு மண்ணை சேகரிக்க வேண்டும்.
மண் மாதிரி எடுக்கும் ஆழம்
நெல், ராகி, கடலை, சோளம் போன்ற சல்லி வேர் கொண்ட பயிர்களுக்கு 15 செ.மீ. ஆழமும், பருத்தி, மிளகாய், கத்தரி, தக்காளி போன்ற ஆணிவேர் கொண்ட பயிர்களுக்கு 22.5 செ.மீ. ஆழமும், தென்னை, மா, பலா, மாதுளை போன்ற தோட்டப்பயிர்களுக்கு 3 அடி வரை மண்மாதிரிகளை சேகரிக்க வேண்டும்.
இது போல் ஒரு வயலில் அல்லது ஒரு ஏக்கரில் (வயலின் பரப்பளவை பொருத்து) குறைந்தது 5 அல்லது 10 இடங்களில் மண்ணை சேகரித்து ஒன்றாகக் கலந்து, வேர், தண்டு, கல் போன்றவற்றை அப்புறப்படுத்திக் கொண்டு வரவேண்டும்.
இதே போல் ஒரு ஏக்கருக்கு 5 முதல் 10 இடங்களில் மண்மாதிரி எடுத்து அனைத்தையும் ஒன்றாகக் கொட்டி நன்கு கலக்க வேண்டும். சேகரித்த மண் குவியலை வட்டவடிவமாக, சமமாக பரப்பி அதன் மீது (X) பெருக்கல் குறியிட்டு, எதிர்எதிர் பாகத்தை நீக்கி விடவேண்டும்.
பின் மீதமுள்ள எதிர் எதிர் பகுதியின் இரண்டு பாகங்களையும் ஒன்றாக்கி, மீண்டும் சமமாக பரப்பி, பெருக்கல் (X) குறியிட்டு, முன்பு போல் எதிர் முனையில் உள்ள இரண்டு பகுதிகளை நீக்க வேண்டும். இதே போல் மூன்று அல்லது நான்கு முறை அரைக்கிலோ மண் வரும் வரை பிரிக்க வேண்டும். மண் ஈரமாக இருந்தால் அம்மண்ணை, நல்ல நிழலான இடத்தில், சுத்தமான துணியை விரித்து அதில் மண்ணை பரப்பி ஆறவைத்து, ஈரம் இல்லாமல் அரைக்கிலோ மண்ணை சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு எடுக்கப்பட்ட சுத்தமான அரைக்கிலோ மண்ணை சுத்தமான பிளாஸ்டிக்பை அல்லது சுத்தமான துணிப்பையில் போட்டுக்கட்டி அத்துடன் விவசாயியின் பெயர், சர்வேஎண், முன்பு சாகுபடி செய்த பயிரின் பெயர், அடுத்து சாகுபடி செய்யப்போகும் பயிரின் பெயர்
முதலியவற்றை ஒருபேப்பரில் எழுதி உங்கள் மாவட்ட மண் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லவேண்டும். அங்கு, உங்கள் மண்ணை பேரூட்டம், நுண்னூட்டம் மற்றும் கார அமிலத்தன்மை குறித்துப் பரிசோதனை செய்து அறிக்கை தருவார்கள். இதற்குப் பரிசோதனைக்குத் தகுந்தாற்போல் ஆய்வுக்கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பரிசோதனைக் கட்டணம் கட்டி ரசீது பெற வேண்டும்.
நீர் பரிசோதனை
விவசாயிகள் மண் பரிசோதனை செய்யும்போது கூடவே பாசன தண்ணீரையும் அவசியம் பரிசோதனை செய்ய வேண்டும், ஏனென்றால் ஒரு பயிர் வளர்ச்சிக்கு மண்னுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு நீருக்கும் பங்கு உண்டு எனவே தவறாமல் பாசனத்தண்ணீரையும் பரிசோதிக்கவேண்டும்.
கிணறு அல்லது ஆழ்துளைக்கிணற்றில் மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்து குறைந்தது 10 நிமிடம் கழித்து தண்ணீரை சேகரிக்க வேண்டும்.
கிணற்றில் சேகரிக்கும்போது கிணற்று சுற்றின் ஓரப்பகுதியில் நீரை எடுக்கக்கூடாது, கிணற்றின் மையப்பகுதியில்தான் நீரை எடுக்க வேண்டும்.
சேகரிக்கும் பாட்டிலை நன்றாக சுத்தம் செய்து இருக்க வேண்டும்.
அதில் ஒரு லிட்டர் தண்ணீரை சேகரித்து மூடி போட்டு எடுத்து செல்ல வேண்டும்.
- அத்துடன்,
- விவசாயியின் பெயர்,
- சர்வே எண்,
- முன்பு சாகுபடி செய்த பயிரின் பெயர்,
- அடுத்து சாகுபடி செய்யப்போகும் பயிரின் பெயர்,
- நீர் சேகரித்த இடம் (கிணறு, குளம், ஏரி, அணை,)
போன்ற விபரங்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதி, அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைத்துறையில் உள்ள மண் மற்றும் நீர் பரிசோதனை ஆய்வகத்தில் சேர்க்க வேண்டும்.
அங்கு அதற்குரிய பரிசோதனைக் கட்டணத்தொகையை செலுத்தி ரசீது பெற வேண்டும்.
குறைந்தது 7 நாட்களில் நமது மண் அல்லது தண்ணீரின் கார, அமிலத்தன்மையை அதற்காக உள்ள மண்வள அட்டையில் நீரின்தன்மையை குறித்துத் தருவார்கள்.
எனவே அவசியம் பாசன நீரையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
*விலைநிலவரம்: (இதுதமிழ்நாடுவேளாண்மைபல்கலைக்கழகஇணையதளத்தில்எடுத்தது)*
மண்மாதிரி பரிசோதனை .
விவசாயி:
நுண்ணுரம் ஆய்வு – ரூ. 5/மாதிரி
மேலூட்டஉரம் ஆய்வு – ரூ. 5/மாதிரி
நுண்ணிய நீர் பாசன நிறுவனம்:
நுண்ணுரம் ஆய்வு – ரூ. 50/மாதிரி
மேலூட்ட உரம் ஆய்வு – ரூ. 50/மாதிரி
நீர் மாதிரி ஆய்வு – ரூ. 10/மாதிரி
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
மண்மாதிரி ஆய்வு.
அமில, காரத்தன்மை, மின்கடத்தும்திறன், தழை, மணி, சாம்பல்சத்து
பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 100 /மாதிரி
அமில, காரத்தன்மை, மின்கடத்தும்திறன், தழை, மணி, சாம்பல்சத்து நுண்ணுரம் பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 250 /மாதிரி
நீர் மாதிரி ஆய்வு
அமில, காரத்தன்மை, தழை, மணி, சாம்பல்சத்து பரிந்துரைக்கப்பட்டஅளவு – ரூ. 50 /மாதிரிவிரிவான ஆய்வு மற்றும் பரிந்துரை – ரூ. 250 /மாதிரி
மண் மற்றும் நீர் பரிசோதனை செய்ய தமிழ்நாடு வேளாண்மைத்துறையில் மண் ஆய்வகத்திற்குக் கொண்டு செல்லலாம். இந்த ஆய்வகங்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளது. மேலும் தொடர்புக்கு அருகில் உள்ள மண் மற்றும் நீர் பரிசோதனைக்கூடத்தையோ அல்லது வேளாண் ஆராய்ச்சி மையங்களையோ அணுகலாம்.
கீழே தமிழ்நாட்டின் மாவட்டவாரியான மண் மற்றும் நீர் பரிசோதனை மையங்களின் முகவரிகள் தரப்பட்டுள்ளன. (இந்த முகவரிகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.)
மண் பரிசோதனை ஆய்வகங்கள்
கடலூர் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், கரும்பு ஆராய்ச்சி நிலைய வளாகம், செம்மண்டலம், கடலூர்– 607 001 | காஞ்சிபுரம் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம் பஞ்சுபேட்டை, காஞ்சிபுரம் -631 502 |
வேலூர் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம் , குடியாத்தம் TK, மேல் ஆலத்தூர் – 638 806. | தர்மபுரி மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனைஆய்வகம் , வட்டாட்ச்சியர் அலுவலக வளாகம் , தர்மபுரி – 638 702. |
சேலம் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், 35/37, B 11, ராஜாராம் நகர் கிராஸ், வனியகலா கல்யாண மண்டபம் அருகில், சேலம் – 636 007 | தஞ்சாவூர் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், |
தேனி மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், 136/2, 2வதுவீதி, சடயல்நகர் பங்களாமேடு (தெற்கு), தேனி – 625 531 | மதுரை மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், |
திண்டுக்கல் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், 3, கூட்டுறவுகாலனி திண்டுக்கல் – 624 001 | கோயமுத்தூர் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனைஆய்வகம், லாலிரோடு, அரசு தொழில்நுட்பக் கல்லூரி அஞ்சல், கோயமுத்தூர் – 642 013 |
புதுக்கோட்டை மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், குடுமியான்மலை – 622104 புதுக்கோட்டை மாவட்டம். | ஈரோடு மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், 41/74 பூங்குன்றனார் வீதி, கருங்கல்பாளையம், ஈரோடு – 638 003 |
திருச்சி மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், காஜாமலை திருச்சி – 620 020 | சிவகங்கை மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், வேளாண்துணை அலுவலர் அலுவலகம், (TNSTC கிளை – அருகில்), தொண்டிரோடு, சிவகங்கை – 630 561 |
இராமநாதபுரம் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், பரமக்குடி – 623 707, இராமநாதபுரம் மாவட்டம். | திருநெல்வேலி மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், எண்.37, சங்கர்காலனி பாளையங்கோட்டை, திருநெல்வேலி -2 |
தூத்துக்குடி மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், சாத்தூர் ரோடு, கோவில்பட்டி– 628 501 | நாகர்கோவில் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், 20c, சுந்தரராஜன் காம்பௌண்ட், இசக்கியம்மன் கோவில் வீதி, நாகர்கோவில் – 629 001 |
நீலகிரி மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், ஊட்டி – 643 001 | நாமக்கல் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண்பரிசோதனை ஆய்வகம், 142 –H, கிஷோர் வளாகம் (HDFC வங்கி எதிரில்) சேலம் மெயின் ரோடு, நாமக்கல் – 637 001 |
திருவாரூர் மாவட்டம். மண் பரிசோதனை ஆய்வகம், ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை வளாகம் வேளாண் துறை அலுவலர் அலுவலகம், மேல்மாடியில், திருவாரூர் – 610 001. | திருவள்ளூர் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், காக்களூர், திருவள்ளூர் to ஆவடிரோடு திருவள்ளூர் – 602 003 |
பெரம்பலூர் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், 93F/21A வெங்கடாசலபதி நகர், புது பேருந்து நிலையம் அருகில்,, பெரம்பலூர் – 621 210 | கிருஷ்ணகிரி மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், வேளாண்துணை அலுவலர் அலுவலகம், ரகுபதி மருத்துவமனை அருகில் கிருஷ்ணகிரி – 635 001 |
விருதுநகர் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் காம்ப்ளக்ஸ், விருதுநகர் – 626 001 | கரூர் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், தில்லைநகர், ராஜ்னூர் தான்தோனி, கரூர் – 639 003 |
அரியலூர் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், வளஜனகரம், அரியலூர் – 621 704 | நாகப்பட்டிணம் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், பஞ்சாயத்து யூனியன் வளாகம், நாகப்பட்டிணம் – 611 001. |
விழுப்புரம் மாவட்டம். முதுநிலை வேளாண் அலுவலர், மண் பரிசோதனை ஆய்வகம், வேளாண் இணை இயக்குநர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் முக்கிய திட்டவளாகம், விழுப்புரம் – 605 602 |
நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்
திருவள்ளூர் மாவட்டம் முதுநிலை வேளாண் அலுவலர் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம் காக்களூர், திருவள்ளூர் To ஆவடி ரோடு திருவள்ளூர் | திருவண்ணாமலை மாவட்டம் முதுநிலை வேளாண் அலுவலர் |
விழுப்புரம் மாவட்டம் முதுநிலை வேளாண் அலுவலர் மண் பரிசோதனை ஆய்வகம் வேளாண் இணை அலுவலர் அலுவலகம் ஆட்சியர் அலுவலுக வளாகம் விழுப்புரம் | கிருஷ்ணகிரி மாவட்டம் முதுநிலை வேளாண் அலுவலர் மண் பரிசோதனை ஆய்வகம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் ரகுபதி மருத்துவமனை அருகில், கிருஷ்ணகிரி – 635 001 |
திருப்பூர் மாவட்டம் முதுநிலை வேளாண் அலுவலர் மண் பரிசோதனை ஆய்வகம் வேளாண் விரிவாக்க மையம் பல்லடம், திருப்பூர் | ஈரோடு மாவட்டம் முதுநிலை வேளாண் அலுவலர் |
மதுரை மாவட்டம் முதுநிலை வேளாண் அலுவலர் மண் பரிசோதனை ஆய்வகம் 52/வடக்கு சித்திரை வீதி மதுரை – 625 001 | பெரம்பலூர் மாவட்டம் முதுநிலை வேளாண் அலுவலர் |
கரூர் மாவட்டம் முதுநிலை வேளாண் அலுவலர் கரூர் மாவட்டம் | நாமக்கல் மாவட்டம் முதுநிலை வேளாண் அலுவலர் |
திருவாரூர் மாவட்டம் முதுநிலை வேளாண் அலுவலர் | பரமக்குடி மாவட்டம் முதுநிலை வேளாண் அலுவலர் |
தூத்துக்குடி மாவட்டம் முதுநிலை வேளாண் அலுவலர் | நாகர்கோவில் மாவட்டம் முதுநிலை வேளாண் அலுவலர் |
நாகப்பட்டிணம் மாவட்டம் முதுநிலை வேளாண் அலுவலர் | விருதுநகர் மாவட்டம் முதுநிலை வேளாண் அலுவலர் |
http://agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_soil_testinglabs_ta.html
http://agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_resourcemgt_soil_ta.html
Comments
Post a Comment