Posts

Showing posts with the label கால்நடைகள்

பசுமாடு சினை பிடிக்கவில்லையா ?

எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி   பசு மாடுகளில் ஒரு சில மாடுகளுக்கு கர்ப்பபையில் பிரச்சினை இல்லை. சரியாக  21 நாட்களுக்கு ஒரு முறை பருவத்திற்கு வருகிறது. சரியான நேரத்தில் சினை ஊசி அல்லது காளையுடன் சேர்த்தும்   பசுமாடு சினை பிடிக்கவில்லையா ?  ஒரு  முறைக்கு பலமுறை சினை ஊசி அல்லது காளையுடன் சேர்த்தோ சினை பிடிக்க வில்லையா?   இதற்க்கான இயற்கை வழியில் எளிய தீர்வு, இந்த நான்கு பொருட்கள் மட்டும் போதும். புற்று மண் மலைவேம்பு இலை சோற்றுக் கற்றாழை கோவை இலை இந்த மருந்துகள் கொடுப்பதற்கு முன்  மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். குடற்புழு நீக்கம் செய்ய நான்கு நாட்கள் கழித்து  இந்த மருந்துகள் கொடுக்க வேண்டும்.   முதல்   நாள்   கொடுக்க   வேண்டியவை மாலை நேரத்தில் 1கிலோ புற்று மண்   1 லி தண்ணீரில் நன்றாகக் கலந்து வைக்கவும். மறுநாள் காலை புற்று மண் தண்ணீர் கலந்த கலவையில் மேலே தெளிந்து உள்ள தண்ணீரை எடுத்து  மாடிற்க்கு கொடுக்க வேண்டும்.   இரண்டாம்   நாள்   கொடுக்க   வேண்...

கொரைசா நோய் – கோழிக்கு

புஞ்சை புளியம்பட்டி கருப்புசாமி அவர்களின் பதிவு:- அதிக தாக்குதல் இருந்தால் – சிறிய பிளஸ்டிக் டப்பியில் விக்ஸ் அல்லது ஜண்டுபாமை உள்புறம் பக்க வாட்டில் தடவி, கோழி குஞ்சுகளை இந்தனுள் விட்டு மேலே அட்டையை வைத்து மூடிவிடவும்; 1 – 2 நிமிடம் கழித்து, குஞ்சுகளை எடுத்து வெளியில் விடவும் (அதிக நேரம் இதனுள் விடவேண்டாம்) – இது போல ஒரு நாளைக்கு காலை, மதியம், மாலை நேரம் செய்ய வேண்டும். வரும் முன்காக்க – சின்ன வெங்காயம் ஒரு கைபிடி – இஞ்சி ஒரு விரளி – பூண்டு 4 பல் – மிளகு 6 – துளசி இலை ஒரு கைபிடி இவை அனைத்தையும் அரைத்து சாறு எடுத்து, 20 நாள் குஞ்சுகளுக்கு = 4 சொட்டு 40 நாள் குஞ்சுகளுக்கு = 6-7 சொட்டு 40 நாளுக்கு மேல் உள்ள குஞ்சுகளுக்கு = 10 சொட்டு 1கிலோ எடை உள்ள குஞ்சுகளுக்கு = 15 சொட்டு வரை காலை = 6 மணிக்கு மதியம் = 12 மணிக்கு மாலை = 6 மணிக்கு 2 நாள் கொடுக்க வேண்டும்.

ஒரு ஏக்கர் மாதிரி தீவனப்பண்ணை – வரைபட விளக்கங்கள்

Image

எளிய மண்ணில்லா பசுந்தீவன வளர்ப்பு முறை

Image
தண்ணீர் வசதி குறைவான மற்றும் பசுந்தீவனம் வளர்க்க சுழல் இல்லாத சமயத்தில் ஹைட்ரோபோனிக் முறை கொண்டு சமாளிக்கலாம் உங்களுடைய வசதிக்கு ஏற்ப ஒரு நிழல் குடில் அமைத்து கொள்ளவும்(50 சதம் சில இடங்களில் 90 சதம் வெப்ப நிலை பொறுத்து) தரைதளம் நீர் தேங்காமல் பாரத்து கொள்ளவும் அல்லது மண்ல் பரப்பி வைக்கவும். ஒரு சில இடங்களில் கட்டிடத்தில் பயன்படுத்தும் பொழுது விளக்கு ஒளியை பயன்படுத்து கின்றனார் வெளிச்சத்திற்காக உங்களுடைய தீவன தட்டு அளவிற்கு அடுக்கு அமைத்து கொள்ளவும் முடிந்த வரை 7-8 அடுக்குகள் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். தண்ணீரால் பாதிப்பு இல்லாமல் இருக்கும் உபகரண்த்தை பயன்படுத்தவும் தீவன தட்டின் அடிப்பகுதியில் சிரிய கம்பி அல்லது கோனுசி கொண்டு தட்டின் அடிப்பாகத்தில் 6-7 ஓட்டை 2 குண்டுசி தடிமனத்திர்கு வெப்ப படுத்தி ஓட்டை போட வேண்டும். நீர் சிறிது சிரிதாக வெளியேறுவதர்கு மேலும் அடை படாமல் பார்த்து கொள்ள வேண்டும்( தட்டு 1 -1.5 அடி நீளம் அகலம் இருந்தால் நன்றாக இருக்கும்) பார்லி, கோதுமை, மக்காச் சோளம், கொள்ளு போன்றவை தீவன வளர்ப்பிற்கு பயனபடுத்தி கொள்ளலாம். இவைகளில் மக்காச் சோளம் விலை குறைவு ஆகையால் இதை பயன...

கால்நடைகளின் பால் உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை ( தொகுப்பு இரண்டு)

கால்நடைகளின் பால் உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை ( தொகுப்பு இரண்டு) உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. நாடுகள் வாரியாக பால் உற்பத்தியில் 2015 படி( மில்லியன் டன்) – இந்திய( 146), அமெரிக்கா(93.5), சைனா(45), பாகிஸ்தான்(42), பிரேசில்(35.7), ஜெர்மன்(29.34), ருஷ்யா(29), பிரான்ஸ்(23.2), நியுசிலான்ட்(21.53), துருக்கி(19) மாநிலம் வாரியாக பால் உற்பத்தியில் 2015 ( மில்லியன் டன்) – உபி(23.33), ரஜஸ்தான்(13.9), அந்திரம்(12.72), குஜராத்(10.315), பஞசாப்(9.714),ம.பி(8.83), மகாரஷ்டரா(8.73), ஹரியானா(7.04), தமிழ் நாடு(7), பிகார்(6.845) தமிழ் நாடு பால் உற்பத்தியில் ஆவின் -20 சதவீதம், தனியார்-25 சதவீதம் மீதமுள்ள 55 சதவீதம் உற்பத்தியாகும் இடத்திலேயே விற்கப்படுகின்றன இந்தியாவில் எண்ணிக்கை அடிப்படையில் (2010 படி) 5.4 கோடி எருமை (யமுனை மாநிலங்களில் பொரும்பான்மை உள்ளன), பசு( 7.29 கோடி). எண்ணிக்கை அளவில் எருமை குறைவாக இருந்தாலும் பால் உற்பத்தியில் முதலிடம் (5.92 கோடி டன்), பசு (4.7 கோடி டன்) மொத்தம் 10.70 கோடி டன். உலக அளவில் பசும்பால் மற்றும் எண்ணிக்கை அதிகம். அடிப்படையில் எருமை இரண்டு வகை ஒ...

நம் நாட்டு மாடுகள் மற்றும் எருமைகள்

நம் நாட்டு மாடுகள் மற்றும் எருமைகள் பற்றி  சிறிய தொகுப்பு நம் நாட்டு மாடுகள் பல்வேறு வகைகளில் கீழ் கண்டவாறு உழவர்களுக்கு மற்றும் நுகர்வோர்களுக்கு உதவிசெய்கிறது இயற்கை விவசாயம் செய்ய இடுபொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது உழுவு வேலை செய்வதற்கு பயன் படுகிறது. கால் நடைகளை கொண்டு டிரக்டரக்கு சமமாக உழவு மற்றும் விதை விதைப்பதர்கு உண்டான சாதனம் தற்பொழுது வட மாநிலத்தில் வந்து விட்டது. நிறைய மூலதன செலவு செய்யாமல் உழவர்களுக்கு எளிய முறையில் உதவி செய்கிறது. நாட்டுரக மாடுகள் அதனுடைய இயல்பான தன்மைகேற்ப மூன்று வகையாக பிரிக்கலாம் அவைகளில் சில பாலுக்கான, வேலைக்கான மற்றும் பொதுவான ரகங்கள் பாலுக்கான ரகங்கள் – கறவை அளவு (அதிகம் காணப்படும் மாநிலங்கள்)- கீர்- 2000:6000 கிலோ( குஜராத், ராஜஸ்தான்), சாஹிவால் -2000:4000 கிலோ ( பஞ்சாப், ஹறியானா, உத்திர பிரதேசம்), ரெட் சிந்தி – 2000:6000 கிலோ ( ஆந்திரா), ராதி – 1800:3500 கிலோ(ராஜஸ்தான, ஹரியானா, பஞ்சாப்) வேலைக்கான மற்றும் வறட்சியை தாங்கும் ரகங்கள (அதிகம் காணப்படும் மாநிலங்கள்) – காங்கேயம், உம்பளச்சேரி, பர்கூர் ( தமிழ் நாடு), ஹாலிக்கார் ( கர்நாடகா), நாகேரி( டெல்லி,...

முன்னத்தி ஏர் 45: முன்னாள் எம்.எல்.ஏ.யின் இயற்கை மாட்டுப் பண்ணை

Image
ஒரு முழுநேர அரசியல்வாதி, முழுநேரப் பண்ணையாளராக மாறிய சுகமான நிகழ்வு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடந்தேறியுள்ளது. கண்ணுக்கெட்டிய தொலைவுக்குச் சீமை கருவேல முள் மரங்கள், வெப்பம் தகிக்கும் கரிசல் மண் இது. இந்த வறண்ட நிலத்தில் ஒரு சோலையை உருவாக்கியுள்ளார் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வ. மார்கண்டேயன். ராமச்சந்திராபுரம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வழக்குரைஞர் பட்டம் பெற்று, பின் அரசியலில் நுழைந்து வெற்றி பெற்ற இவர், தன்னுடைய சிறு வயது மகனின் ஆசை வார்த்தைகளால் உந்தப்பட்டு இயற்கை வேளாண்மைக்குள் வந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. வீட்டுமனைத் தொழில் செய்ய வேண்டும் என்று புறப்பட்ட இவருக்கு மகன் கூறிய வார்த்தைகள், சூழலைக் கெடுக்காத தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தீவிரமாக ஏற்படுத்தின. பால் பண்ணை வேளாண்மையைக் குடும்பத் தொழிலாகக் கொண்டிருந்தாலும் வழக்குரைஞராக மாறிப் பொதுவாழ்வில் நாட்டத்துடன் இருந்த இவர், தனது ஊரில் உள்ள பொது இடத்தை நல்ல பழத்தோட்டமாக மாற்றினார். அதன் தொடர்ச்சியாக இயற்கை வேளாண்மை அவரை ஈர்த்தது. கடந்த 2007-ம் ஆண்டு இயற்கை வேளாண்மை, பால் பண்ணை என்று தனது பண்ணையை அவர்...