பருவம்: ஆடி, தை ஆரோக்கியமான மிளகாய் நாற்றுகளை வளர்ப்பது நாற்றங்கால் : உழவு செயயும் போது நன்கு தொழுவுரம் இட்டு ( வேப்பம் புண்ணாக்கு கலந்து) மேட்டு பாத்தி முறையில் நாற்று விடுவது நன்று. ஏக்கருக்கு 1 கிலோ விதை போதுமானது. முதல் 30 நாளைக்கு தினமும பிறகு 3 நாளைக்கு நீர் பாய்ச்சுவது நன்று. 45 நாட்களில் நாற்று நடுவதற்கு தாயராகி விடும். மேட்டுப்பாத்தி நாற்றங்கால்: மேட்டுப்பாத்திகளை ஓரளவு நிழல் படியும் படியான இடத்தில் 10-15 செ.மீ. உயரத்தில் தயாரிக்க வேண்டும். மேட்டுப்பாத்தியின் அகலம் ஒரு மீட்டர் வரையும், நீளம் 3 மீட்டர் வரையும், தேவைக்கேற்ப அமைக்கலாம். மண் மிருதுவாகவும் இறுக்கமாக இல்லாமலும், ஈரம் காக்கும் தன்மையுடையதாகவும் அமைக்க வேண்டும். இதற்காக மண்ணின் தன்மையைப் பொருத்து குறுமண், மணல் ஆகியவற்றை கலக்க வேண்டும். நல்ல வீரியமுள்ள நாற்றுகளைப் பெற நன்கு பண்படுத்திய ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 20 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் சேர்க்க வேண்டும். அதோடு ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு இரண்டு கிலோ டி.ஏ.பி. உரம் இடுவதால் நாற்றுகள் நன்கு ஊட்டச்சத்துடன் வளர்கின்றன. மேலும், நாற்றுகளைப் பிடுங்கு...
மண் மற்றும் நீர் பரிசோதனை நாடு முழுவதும் விவசாயம் செய்யும் மண்ணும் தண்ணீரும் ஒரே மாதிரி அமைவதில்லை. இயற்கையாக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பண்புகளுடன் மண் மற்றும் தண்ணீர் அமைந்துள்ளது. இதை சரியாக அறிந்து விவசாயம் செய்தால் மட்டுமே மேலும் முன்னேற முடியும். விவசாயத்தில் நீர் மற்றும் மண் முக்கிய பங்கு வகிக்கின்றன ஒரு பயிரின் வளர்ச்சியைத் தீர்மானிப்பவை மண், தண்ணீர் மற்றும் சுற்றுப்புற தட்பவெப்பநிலைதான். இதில் நாம் மண் மற்றும் தண்ணீரின் தன்மைகளை அறிந்து கொள்ளவேண்டும். மண் மற்றும் தண்ணீரின் பண்புகளை தீர்மானிப்பது கார, அமில தன்மை மற்றும் பேரூட்டச்சத்துக்களும் நுண்னூட்டச் சத்துக்களுமே. நம் வயலில் உள்ள மண், நாம் பாசனம் செய்யக்கூடிய நீரின் கார, அமில தன்மை, பேரூட்டச்சத்து மற்றும் நுண்னூட்டச் சத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும். இதனால் நமது நிலத்தில் அதிகமுள்ள சத்துக்கள் எவை? குறைவான சத்துக்கள் எவை? என அறிய முடிகிறது. இதன் மூலம் எளிமையாக சத்துக்களை பராமரித்து விவசாயம் செய்வதுடன், தேவையற்ற பொருளாதார மற்றும் கால விரயத்தைத் தவிர்க்கலாம். மண் பரிசோதனை மண் பர...
Comments
Post a Comment