விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்
நண்பர்களுக்கு வணக்கம் . இன்றைய தலைப்பு ஒரு நாள் காணாமல் போகும் நிலை தெரிகிறது. விதை சேமிப்பது என்ற தலைப்பில் நாம் பாரம்பரிய விதைகள் மட்டும் இங்கு எடுத்துக்கொள்ளலாம். பாரம்பரிய விதைகள் போதுமான அளவில் கிடைக்கவில்லை. கிடைக்கும் விதைகளை சரியான முறையில் பெருக்கம் செய்பவர்கள் மிக குறைவானவர்களே. அதையும் தாண்டி விதைகள் இருப்பின் சில கூட்டம் பாரம்பரியத்தை நிலை நாட்டுவதாக சொல்லிக்கொண்டு விதைகள் அனைத்தையும் அதிக விலை கொடுத்து வாங்கி சென்று வெளி நாட்டிற்கு விற்கும் நிலை உருவாகி விட்டது. உதாரணமாக மாப்பிள்ளை சம்பா மற்றும் சிவப்பு கவுனி இரண்டும் ஏறத்தாழ ஒரு நிறமாகவும் ஒரு வயதுடையதாகவும் இருந்தாலும் அதன் மறுத்துவகுணங்கள் வேறுபடும். அப்படி இருக்க இந்த இயற்கை கூட்டம் இவ்விரண்டையும் சேர்த்து ஒரு புதிய ரகத்தை விட்டு இவ்விரண்டையும் அழித்துவிட நீண்ட காலம் பிடிக்க போவதில்லை. காரணம்…… விவசாயி தமது விதையை நீண்டகாலம் சேமிக்க தேவையான வசதிகளை இல்லாததும், சோம்பேறித்தனமுமே காரணம். அதனால் விதைகளை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் பாதுகாகிறோம், தாங்கள் தேவைப்படும் போது தங்களுக்கு விதைகள் கொடுக்கிறோம் என்று ஒரு கூ